பிரதமர் பதவியோ அரசின் வேறு எந்த பதவிகளோ விரைவில் காலியாகப் போவதில்லையென நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.
மஹிந்த ராஜகபக்சவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லையென்பது ஆறு தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் மஹிந்த பதவியை விட்டு விலகப் போவதில்லையென தெரிவிக்கின்ற எஸ்.பி, டிசம்பர் 7ம் திகதியின் பின்னரும் தற்போதைய அரசாங்கமே தொடரும் என்கிறார்.
இதேவேளை, தேர்தலை நோக்காகக் கொண்ட சலுகைகள் அறிவிப்பும் அதிகரித்து வருவதுடன் இன்று நள்ளிரவு முதல் மூன்றாவது தடவையாக எரிபொருள் விலை குறைப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment