மஹிந்த ராஜபக்ச எந்த அடிப்படையில் பிரதமர் பதவியை உரிமை கோருகிறார் என 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் அமர்ந்திருக்க முடியாது எனக் கூறி இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் விசாரணை டிசம்பர் 5,6,7ம் திகதிகளில் இடம்பெறவுள்ளமையும் மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக தம்பர அமில தேரர் பிறிதொரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment