மட்டக்களப்பு, வவுண தீவு சோதனைச் சாவடியில் பணியாற்றிக் கொண்டிருந்த 28 மற்றும் 35 வயதான இரு பொலிஸ் ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இப்பின்னணியில் கொழும்பிலிருந்து தற்போது விசேட விசாரணைக் குழுவொன்று அங்கு விரைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கல்முனையைச் சேர்ந்த தினேஸ் மற்றும் உடுகமயைச் சேர்ந்த இந்திக எனற அறியப்படும் இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment