சாதாரண குடி மக்களுக்காகு சராசரியாக 1 லட்சம் ரூபாவே ஜனாதிபதி நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டுள்ள அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருந்தொகைப் பணத்தை அள்ளிக் கொண்டுள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் சுமார் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2.6 கோடி ரூபாவை உதவியாகப் பெற்றுள்ள அதேவேளை கடந்த வருடம் மாத்திரம் மூவருக்கு 1.1 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் தமது மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான தொகையையே சராசரியாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment