நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து கூட்டு எதிர்க்கட்சியினர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சபையில் பாரிய கூச்சல் நிலவுகின்ற நிலையில் இன்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மஹிந்த தரப்பினர் தற்போது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கோசங்களை எழுப்பி வருகின்றமையும் அருந்திக்க பெர்னான்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment