மஹிந்த அணி நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதாக தெரிவித்து வரும் நிலையில் இன்றைய சபை அமர்வில் அமைச்சுப் பதவியுடன் பக்கம் தாவிய விஜேதாச ராஜபக்சவும் சுயாதீனமாக இயங்கப் போவதாக தெரிவித்து வந்த அத்துராலியே ரதன தேரரும் கலந்து கொண்டிருந்தனர்.
விஜேதாச ராஜபக்ச ஆளுங்கட்சிக்கான பக்கத்தில் அமர்ந்திருந்த அதேவேளை ரதன தேரர் எதிர்க்கட்சிப் பக்கம் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்குப் பெருந் தியாகம் செய்தததாகவும் சபாநாயகர் தலையிட்டு ஜனாதிபதியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடாத்தி தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment