மஹிந்த ராஜபக்சவின் நியமனத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் கடந்த வாரம் கொழும்பு, கொல்லுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்த நிலையில் திங்கட்கிழமை 5ம் திகதி, கூட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கொழும்பில் பேரணி ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்.'
இந்நிலையில் 1500 பொலிசார் உட்பட விசேட அதிரடிப்படையினரும கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பத்தரமுல்ல பகுதியில் பேரணி இடம்பெறவுள்ளதோடு சுற்று வட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment