நாளை மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு: மைத்ரி இணக்கம்! - sonakar.com

Post Top Ad

Thursday 15 November 2018

நாளை மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு: மைத்ரி இணக்கம்!


தான் ஜனநாயக விரோதமாக செயற்படப் போவதில்லையென தெரிவிக்கின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாளைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை மீண்டும் நடாத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.



நேற்றைய தினம் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அதிருப்தியுள்ளதாக தெரிவித்திருந்த ஜனாதிபதி இன்று மாலை ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி புதிய நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு இணங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment