நாடாளுமன்ற பெரும்பான்மை யாரிடம் உள்ளதோ அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதுதான் தர்மம் என தெரிவிக்கிறார் குமார வெல்கம.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக வருவதையும் கடுமையாக எதிர்த்திருந்த வெல்கம மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கின்ற போதிலும் பெரும்பான்மைப் பலம் உள்ளவர்கள் ஆட்சியமைப்பதோ தர்மம் என தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் குழப்பப்பட்டு வரும் நிலையில் நாளை மதியம் 1.30 மணிக்கு சபை அமர்வு இடம்பெறவுள்ளதுடன் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment