சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கசார்பாக நடந்து கொண்டமையே நாடாளுமன்றைக் கலைப்பதற்கான காரணம் என தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
புதிய நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் மறுத்திருந்த அதேவேளை, நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
எனினும், 100க்கும் குறைவானோரே மஹிந்தவின் நியமனத்தை ஆதரித்திருந்த நிலையில் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சபாநாயகரே காரணம் என விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment