ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.
வெற்றிலைச் சின்னமே உபயோகிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் மைத்ரி அணி ஆதரவாளர்களும் பலரும் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ள நிலையில் மைத்ரி அணி மேலும் பலவீனமடைந்துள்ளது.
இந்நிலையில், மொட்டுச் சின்னத்தில் மஹிந்த தலைமையிலேயே தேர்தலில் போட்டியிடப் போவதாக மஹிந்தானந்த தெரிவிக்கின்றமையும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைக் குறி வைத்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகத் தயாராகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment