நாடாளுமன்ற பெரும்பான்மை இரு தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிலவும் அரசியல் சர்ச்சைகளை மைத்ரிபால சிறிசேனவே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
எங்கு வேண்டுமானாலும் தமது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கும் நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு சர்ச்சைக்க முடிவு கட்ட வேண்டியது மைத்ரிபால சிறிசேனவேயன்றி வேறு யாருமில்லையென ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதை அனுமதிப்பதில் மைத்ரிபால சிறிசேன தயக்கம் காட்டி வரும் நிலையில் இழுபறி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment