திங்கட்கிழமைக்குள் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தலைக்கு 3 மில்லியன் டொலர் வரை பேரம் பேசப்படுவதாக தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.
யோசித ராஜபக்ச ஊடாக இப்பேரம் நடப்பதாகவும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தலா 3 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் மங்கள மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்சவின் நியமனத்தை நிராகரித்து பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இதுவரை இணைந்து நிற்கின்றமையும் இந்நிலையில் நாளைய தினம் அனைத்து கட்சி சந்திப்பொன்றை நடாத்த மைத்ரி முயற்சிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment