அனைத்து கட்சி சந்திப்புக்கு அழைக்கும் மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday 17 November 2018

அனைத்து கட்சி சந்திப்புக்கு அழைக்கும் மைத்ரி!


நாட்டில் அரசியல் குழப்ப நிலை தொடர்கின்ற சூழ்நிலையில் நாளை மாலை 5 மணியளவில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாளை மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment