பெரும்பான்மையுள்ளவர்களுக்கே அதிகாரம்: ரதன தேரர்! - sonakar.com

Post Top Ad

Thursday 29 November 2018

பெரும்பான்மையுள்ளவர்களுக்கே அதிகாரம்: ரதன தேரர்!


தான் தொடர்ந்தும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்படுவதாக தெரிவிக்கின்ற அத்துராலியே ரதன தேரர், நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ளவர்களுக்கே அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார்.



இன்றைய அமர்வில் அவரும் கலந்து கொண்டிருந்த அதேவேளை பிரதமரின் நிதிக் கையாடலைத் தடுக்குமுகமான பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளளது.

இந்நிலையிலேயே, தற்போது நிலவரம் மாறி வருவதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மைப் பலம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment