மஹிந்த நிதி மோசடி சிக்கலில் மாட்டிக் கொள்வார்: விஜித எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Thursday 29 November 2018

மஹிந்த நிதி மோசடி சிக்கலில் மாட்டிக் கொள்வார்: விஜித எச்சரிக்கை!


பிரதமரின் செயலாளர் பொது நிதியைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சவின் செலவீனங்களை ஈடுசெய்வதற்கு எதிராக இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பயன்படுத்தினால் மஹிந்த ராஜபக்ச பாரிய நிதி மோசடி சிக்கலில் மாட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.


மஹிந்த ராஜபக்சவின் ஹெலிகப்டர் செலவு மாத்திரமே 21 நாட்களில் 840 மில்லியன் ரூபா என நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து மஹிந்த ராஜபக்ச பொது நிதியைப் பயன்படுத்தத் தகுதியற்றவராகிறார் என விஜித மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment