ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கிய பொலிஸ் உளவாளி நாமல் குமார, தான் அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன ஊடாக தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார்.
இதற்கு மஹிந்த ராஜபக்சவின் பூரண ஆசீர்வாதமும் பெறப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த கொலைத் திட்ட சர்ச்சையின் பின்னணியிலேயே பதற்றமடைந்த மைத்ரி, பிரதமரை மாற்றியதுடன் நாடாளுமன்றையும் கலைத்துள்ளதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment