தற்போதைய அரசியல் சூழ்நிலையின் பின்னணியில் ஸ்ரீலங்கா பொலிசுக்குள் பாரிய குழப்ப நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண கடமைகளை மாத்திரம் நிறைவேற்றி வரும் பொலிசார், ஏனைய புலன் விசாரணை மற்றும் விசேட விசாரணை நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாகவும் இதனால் பூஜித கோபமுற்றுள்ள போதிலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் இயங்குகிறதா என்ற குழப்பம் நிலவுகின்ற அதேவேளை சட்டவிரோத அமைச்சர்களின் பணிப்புரைகளை ஏற்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment