நாளைய வாக்கெடுப்பு பற்றி நாளை ஆராய்வோம்: மஹிந்த அணி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 November 2018

நாளைய வாக்கெடுப்பு பற்றி நாளை ஆராய்வோம்: மஹிந்த அணி!


நாளைய தினம் நாடாளுமன்றில் மீண்டும் வாக்கெடுப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் நாளைய அமர்வில் கலந்து கொள்வது குறித்து நாளைய தினமே தாம் கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கிறது மஹிந்த அணி.



நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் சபை அமர்வுகளைப் புறக்கணித்து வரும் மஹிந்த அணி, நாளைய வாக்கெடுப்பை நடாத்த விடாது குழப்புவது குறித்தும் கருத்து வெளியிட்டு வருகிறது. 

அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் பொது நிதியை மஹிந்த ராஜபக்ச பயன்படுத்துவதற்கு எதிரான பிரெரணை மீதே வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள அதேவேளை, ஏலவே நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மஹிந்த தரப்பு தம்மை அரசாங்கம் என கூறக்கூடாது எனவும் ஐ;தே.க தரப்பு வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment