மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டதும் அவருக்கும் புதிய அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி இப்பிரேரணையைக் கையளித்துள்ள அதேவேளை, தொடர்ந்தும் தம்மிடமே நாடாளுமன்ற பெரும்பான்மை இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமையும் மஹிந்தவுக்கான பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment