உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வரும் வரை தமது தரப்பு அலரி மாளிகையிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கப் போவதாக தெரிவிக்கிறார் கபீர் ஹாஷிம்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி விட்டதாக ஜனாதிபதி திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்த போதிலும் ரணில் தரப்பு தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியிருப்பதுடன் மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதம் என தெரிவிக்கிறது.
இந்நிலையில், நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றை நாடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி மற்றும் த.தே.கூ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment