நாடாளுமன்றில் சிறு சர்ச்சை இடம்பெற்றுக்கொண்டிருக்கிறதே தவிர நாட்டில் வேறு எந்த சிக்கலும் இல்லையென தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
டிசம்பர் 7ம் திகதி உச்ச நீதிமன்றின் தீர்ப்பினையடுத்தே தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கும் அவர், நாடாளுமன்றில் நிலவும் சர்ச்சை பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்கவில்லையெனவும் அரச இயந்திரம் சுமுகமாக இயங்குவதாகவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், பாதாள உலகமும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பினையடுத்து தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை உரிமை கொண்டாடுவதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment