அங்குனுகொலபெஸ்ஸ சிறைச்சாலையில் வைத்து சக மரண தண்டனைக் கைதியொருவரை மேலும் இருவர் கருங்கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
போகந்தற பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் மரண தண்டனை பெற்றிருந்த மேனக சஞ்சீவ எனும் நபரே இவ்வாறு இன்று கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கொலையாளிகளும் ஏலவே மரண தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment