மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிரான பிரேரணைகள் நாடாளுமனறில் நேற்றும் இன்றும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சபை அமர்வும் எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகள் உச்ச நீதிமன்றில் ஆரம்பமாகவுள்ள அதேவேளை 7ம் திகதி தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஒரு மாத காலத்துக்கு மேலாக தொடர்ந்தும் 122 பேருடனான நாடாளுமன்ற பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி நிரூபித்துள்ளதுடன் ஜே.வி.பி தவிர்ந்து ஆகககுறைந்தது 117 பேர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கும் ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment