அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அரசாங்க நிதியை பயன்படுத்துவதற்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஹிந்த அணியினர் வாக்கெடுப்பில் கலந்து கொளளாத நிலையில் 122 பேர் இன்றைய வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டு பிரேரணையை நிறைவேற்றியுள்ளனர்.
சம்பிக்க ரணவக்கவினால் பிரேரணை சமர்ப்பிக்கபட்டிருந்த அதேவேளை இவ்வாக்கெடுப்புகளை மஹிந்த அணி தொடர்ந்தும் புறக்கணித்து வருவதுடன் நிழல் அரசாங்க நடவடிக்கைகளை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment