7ம் திகதிக்குப் பின்னும் மஹிந்த தான் பிரதமர்: டிலான்! - sonakar.com

Post Top Ad

Thursday 29 November 2018

7ம் திகதிக்குப் பின்னும் மஹிந்த தான் பிரதமர்: டிலான்!


டிசம்பர் 7ம் திகதி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும் மஹிந்த தான் பிரதமராக இருக்கப் போகிறார் என்கிறார் டிலான் பெரேரா.



மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டால் அதனூடாக தேர்தல் ஒன்றே இடம்பெறப் போகிறது எனவும் அத்தேர்தலில் மஹிந்த இலகுவாக வெற்றி பெற்று பிரதமராவார் எனவும் தெரிவிக்கின்ற டிலான் அவ்வாறில்லாவிடின் கூட தீர்ப்பையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பலர் மஹிந்த பக்கம் தாவக் காத்திருப்பதனால் அவ்வகையிலும் மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமராக இருப்பார் என தெரிவிக்கிறார்.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில் டிலான் இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment