மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளதாக பரவும் செய்தியில் உண்மையில்லையென மறுதலித்துள்ளார் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச.
நாளைய நாடாளுமன்ற அமர்வுக்கு எல்லோரும் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை கட்சி மாறியதன் பின்னணியில் நாமல், மஹிந்த உட்பட்டோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர முடியுமா எனும் கேள்வியும் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, மைத்ரிபால சிறிசேனவின் நடவடிக்கை நீதிமன்றம் ஊடாக சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளமை பாரிய அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளமையும் ரணில் விக்கிரமசிங்கவை பல்வேறு தரப்புகள் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment