நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 04ம் திகதி ஜனாதிபதியின் அறிவிப்புக்கிணங்க நாளை 14ம் திகதி நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசன ஒதுக்கீட்டில் சர்ச்சைகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பினையடுத்து ஜனாதிபதி தரப்பு இது வரை மௌனித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment