மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் அவருக்கான ஆதரவைத் தேடி இடம்பெற்ற பேரத்தில் உறுப்பினர்கள் தனித்தனியாக கழன்று விடாது பாதுகாக்க, ஒட்டு மொத்தமாக உம்றா சென்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னணியில் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
நான்கரை வருடங்களுக்கு முன்பாக நாடாளுமன்றைக் கலைக்க முடியாது என நம்பப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதோடு, பிரதமரை நீக்க முடியாது என்ற நம்பிக்கையும் ஏலவே தகர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரணிலின் நீக்கத்தினையடுத்து தன்னிடம் மேலும் அஸ்திரங்கள் இருப்பதாக ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment