மீண்டும் நாடாளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது முடிவை அறிவித்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச.
இன்றைய தினம் சபை அமர்வுகளை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் குழப்பியடித்த போதிலும், சபாநாயகர் பொலிஸ் பாதுகாப்புடன் உள்நுழைந்து வாக்கெடுப்பை நடாத்திச் சென்றிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தான் எக்காரணங்கொண்டும் நாடாளுமன்ற தவணையை ஒத்தி வைக்கப் போவதில்லையென மைத்ரி தெரிவித்துள்ளமையும் மீண்டும் எதிர்வரும் திங்கள் நாடாளுமன்றம் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment