மூன்றாவது தடவையாக பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச அவருக்கு வழங்கப்பட்ட பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு விட்டதாக காத்திரமாக தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன்.
இந்நிலையிலும் மஹிந்த ராஜபக்ச பகிரங்க அறிவிப்பை மேற்கொண்டு விட்டுச் செல்லாவிடின் அவர் ஜனநாயக விரோதியாக மாறுவது தவிர்க்கப்பட முடியாதது என சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்ச தனது சகாக்களையும் கட்டுப்படுத்தாது குழப்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் காட்சிகளையே இன்று காணக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment