நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார் கம்மன்பில! - sonakar.com

Post Top Ad

Friday 16 November 2018

நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார் கம்மன்பில!


இரு நாட்களாக குழப்பங்கள், கூச்சல் மற்றும் வன்முறைகளை உருவாக்கி சர்வதேச அளவில் அபகீர்த்திக்குள்ளாகியுள்ள நிலையில் இன்று மதியம் நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.



ஒக்டோபர் 26ம் திகதி திடீரென மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, பின் நாடாளுமன்றையும் கலைத்து மைத்ரிபால சிறிசேன உருவாக்கியுள்ள அரசியல் சர்ச்சை பெரும்பாலும் இன்று முடிவுக்கு வரும் எனவும் நேற்றைய தினம் அவர் இணக்கம் வெளியிட்டதற்கிணங்க, இன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்று ஐக்கிய தேசிய முன்னணியி தமது பெரும்பான்மையை நிரூபிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், நேற்றிரவு பிரத்யேகமாக ஜனாதிபதியை சந்தித்த உதய கம்மன்பில குழு, இன்று நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment