ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்னுமொரு பிரதமரை நியமிக்கும் வரை மஹிந்த ராஜபக்சவே நாட்டின் பிரதமராகக் கடமையாற்றுவார் என தெரிவிக்கிறார் மஹிந்த சமரசிங்க.
புதிய பிரதமரை நியமிப்பது ஜனாதிபதியின் விருப்பம் என மேலும் தெரிவித்துள்ள அவர், இன்றைய தினமும் நாடாளுமன்றில் பிரதமரின் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்சவே அமர்வார் என தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஆளுங்கட்சி ஆசனங்களில் தாமே அமரப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment