அரசியலமைப்பின் 38(2)வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதியை பதவி கவிழ்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசித்து வருவதாக தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
குறித்த சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் தொடர்ந்து கடமைகளை நேர்மையாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதினால் அதற்கான பிரேரணையை முன் வைக்க முடியும் என ஹரின் விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி மீதான நம்பிக்கையிழந்துள்ளதன் பின்னணியில் அவரை நீக்குவதற்கான முயற்சியில் இறங்கப் போவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment