மஹிந்த ராஜபக்ச மற்றும் புதிய அமைச்சரவை நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ள நிலையில் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு அரசாங்கத்தை மாற்றியமைக்குமாறு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார் சபாநாயகர்.
இன்றைய சபை அமர்வின் போது ஐக்கிய தேசியக் கட்சி 122 உறுப்பினர்களின் ஆதரவை எழுத்து மூலம் நிரூபித்துள்ள நிலையில் வாய் மூல வாக்கெடுப்பின் அடிப்படையிலும் நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி கண்டுள்ளதாக சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், இம்முடிவைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் சபாநாயகர் சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment