ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையிலேயே தங்கியிருக்கும் நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச - ரணில் இடையே நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேறுமிடத்து அவரது பாதுகாப்பு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போது நிலவும் அரசயில் சூழ்நிலைக்குத் தீர்வு காணுமுகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு செய்தித் தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment