நாடாளுமன்ற கலைப்புக்கு ஆதரவாகவும் வழக்குத் தாக்கல்! - sonakar.com

Post Top Ad

Tuesday 13 November 2018

நாடாளுமன்ற கலைப்புக்கு ஆதரவாகவும் வழக்குத் தாக்கல்!


நாடாளுமன்றைக் கலைத்தமைக்கு எதிராக பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்கின்ற நிலையில் ஜனாதிபதியின் செயலை ஆதரித்தும் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அரசியல்வாதிகள் குவிந்திருந்த நிலையில் இன்றைய தினம் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசாரணைகள் தொடர்கிறது.

இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினரால் நாடாளுமன்றைக் கலைத்தமையை ஆதரித்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment