பிரதமர் பதவி சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் நாடாளுமன்றை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுவதாக அறியமுடிகிறது.
மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிப்பது சந்தேகத்துக்குள்ளாகியுள்ள நிலையில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பின்னணியில் முன் கூட்டியே நாடாளுமன்றைக் கலைப்பதற்கான சாத்தியக் கூறு பற்றி ஜனாதிபதி தரப்பு சட்ட ஆலோசனை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'
19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களின் பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment