சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றால் தான் மனம் மாறவும் பிரதமர் பதவியை மீண்டும் ஐ.தே.கவிடமே ஒப்படைக்கவும் தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் கைத்தொலைபேசிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடுமையான நிபந்தனைகளுடன் ஸ்ரீலசுகட்சியின் கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தாம் எதிர்காலத்திலும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப் போவதில்லையென மைத்ரிபால சிறிசேன தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment