புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வழமை போன்று தமது அமைச்சு அலுவலகத்துக்குச் சென்று அமர்ந்துள்ள சம்பிக்க, அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
தயா கமகேவும் இவ்வாறே தமது அலுவலகத்துக்குச் சென்றுள்ள நிலையில் மஹிந்தவைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவை நியமனங்களும் பேரங்களும் தொடர்கிறது.
அர்ஜுன ரணதுங்கவுக்கு பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததுடன் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்றக் கோரி பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பிக்க, தனது அலுவலகத்தில் வழமை போன்று கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment