நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப சூழ்நிலைக்கு 24 மணி நேரத்துக்குள் தான் தீர்வு வழங்கப் போவதாக தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.
சற்று முன்னர் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் வினவிய போது சபாநாயகரின் கடிதம் இன்னும் ஜனாதிபதியின் கைக்கு கிடைக்கப் பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஜனாதிபதி தீர்க்கமான அறிவிப்பொன்றை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க தரப்பை ஆதரித்து கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றியுள்ளதாக சபாநாயகர் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment