பசில் ராஜபக்சவின் வழக்கு மார்ச் 2019 வரை ஒத்தி வைப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 26 November 2018

பசில் ராஜபக்சவின் வழக்கு மார்ச் 2019 வரை ஒத்தி வைப்பு!


2.9 பில்லியன் ரூபா திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் பசில் ராஜபக்ச மற்றும் அவரது நெருங்கிய சகாக்கள் மூவருக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்கின் விசாரணை 2019 மார்ச் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



குறித்த நிதியை எடுத்து 2015 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கூரைத் தகடுகள் விநியோகிக்கப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மைத்ரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவை பிரதமாரக நியமித்துள்ள நிலையில் பழைய வழக்குகளின் எதிர்காலம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment