பேருவளை - மாத்தறை: இரு நாட்களில் இரு பாடசாலை மாணவர்கள் கொலை! - sonakar.com

Post Top Ad

Monday, 26 November 2018

பேருவளை - மாத்தறை: இரு நாட்களில் இரு பாடசாலை மாணவர்கள் கொலை!


பேருவளை மரக்கலவத்தை மற்றும் மாத்தறை எலவெல வீதியில் இரு வேறு சம்பவங்களில் தாக்குதலுக்குள்ளான இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


பாடசாலையில் ஏற்பட்ட முறுகலின் பின்னணியிலேயே குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை மாத்தறை சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் சேர்ந்தே ஒருவரை தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பேருவளை சம்பவத்தின் பின்னணியில் 15 வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment