நாடாளுமன்றை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது அமெரிக்கா.
நாடாளுமன்றில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ரணில் விக்கிரமசிங்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்து வரும் நிலையில் நவம்பர் 16 வரை நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இந்நிலையிலேயே, அமெரிக்கா இவ்வேண்டுகோளை விடுத்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகருடன் கலந்துரையாடி நாடாளுமன்றம் உடாக ஜனநாயகத்தை பேண வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment