ஜனநாயகம் தெரியாத ஒருவரை கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அண்மையில் குமார வெல்கம தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ளார் கோத்தாபே ராஜபக்ச.
தனக்கு நன்றாகவே ஜனநாயகம் தெரியும் எனவும் ஜனநாயகம் அதிகபட்சம் பேணப்படும் நாட்டில் தான் வாழ்ந்துள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, தேவை வரும் போது தமது வெளிநாட்டு பிரஜாவுரிமையைத் தாம் கைவிடவுள்ளதாகவும் கோத்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment