ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கோத்தாபே ராஜபக்ச ஆகியோரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவிடம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீண்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன் தினம் குழந்தையின் உடல் நலக்குறைவை காரணம் காட்டி விசாரணையைத் தவிர்த்திருந்த நிலையில் நாலக இன்று ஆஜராகியுள்ளார்.
காலை 9.30 அளவில் நாலக டி சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment