மைத்ரிக்கு கரு ஜயசூரிய கடிதம்! - sonakar.com

Post Top Ad

Sunday 28 October 2018

மைத்ரிக்கு கரு ஜயசூரிய கடிதம்!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பேணுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஜனாதிபதி தடுத்து வைத்துள்ள நிலையில் சிறுபான்மை கட்சிகளுடனான பேரம் பேசல் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், வெளிநாடுகளும் இலங்கையில் அரசியல் சட்டம் பேணப்பட வேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment