ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிய போதிலும் அதனை ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கையாண்ட விதமே மைத்ரிக்கு அதிருப்தி ஏற்பட காரணம் என தெரிவிக்கிறார் நிமல் சிறிபால டிசில்வா.
பொலிஸ் உளவாளி நாமல் குமார மூலமாக தகவல் வெளியாகிய போதிலும் அது தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் நடப்பதாக மைத்ரி அவ்வப்போது அதிருப்தி வெளியிட்டு வந்திருந்ததுடன் கூட்டு எதிர்க்கட்சியும் விமர்சித்து வந்தது.
இந்நிலையிலேயே திடீரென மஹிந்தவை பிரதமராக நியமித்து மைத்ரி இலங்கை அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment