மஹிந்த ராஜபக்சவை சட்டவிரோதமாக பிரதமர் பதவியில் நியமித்துள்ள மைத்ரிபால சிறிசேன, தன் மீது வீண் குற்றச்சாட்டுகளை முன் வைத்து கதையளப்பதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
புதிய பிரதமர், புதிய அமைச்சரவை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்ற அதேவேளை தம்மிடமே தொடர்ந்தும் நாடாளுமன்ற பெரும்பான்மையிருப்பதாக தெரிவித்து அலரி மாளிகையில் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க தங்கியிருக்கிறார்.
இந்நிலையிலேயே, நேற்றைய தினம் ஜனாதிபதியின் உரையில் தனக்கெதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளனைத்தையும் நிரகரித்துள்ள ரணில் சிறிசேன கதையளப்பதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment