இரு தரப்போடும் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday 27 October 2018

இரு தரப்போடும் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு!


இலங்கையில் தோன்றியுள்ள அசாதாரணமான அரசியல் சூழ்நிலையில் பின்னணியில் மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை வெளிநாட்டு தூதர்கள் இன்று சந்தித்துள்ளனர்.


நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்சமயம் நாட்டின் பிரதமர் யார்? என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தூதர்கள் ரணில் விக்கிரமசிங்கவையும் சீன தூதர் மஹிந்த ராஜபக்சவையும் இன்று சந்தித்துள்ளார். இந்தியாவும் மஹிந்தவுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது:.

No comments:

Post a Comment